அருள்மிகு சூரியன் ஸ்தலம் - சூரியனார்கோயில்

ஸ்வாமி: ஸ்ரீ சூரிய பகவான் 
அம்பாள்: ஸ்ரீ உஷா தேவி , ஸ்ரீ பிரத்யுஷா தேவி 
சூரிய பகவான் மேற்க்கு நோக்கி காட்சி அளிக்கிறார்


சரயனர கவலஸ்தல வரலாறு: ஒன்பது க்ரஹங்களில்  சூரியன் முதன்மையானதாகும். இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோவில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் (கி.பி 1060 - கி.பி.1118) கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பழங்காலத்தில் இக்கோவில் அர்காவனம் என்று அழைக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றது, இக்கோவிலின் முன் புஷ்கரினி தீர்த்தமும் நவக்கிரக தீர்த்தமும் உள்ளன. கர்ப்பக்கிரகத்தில் சூரிய பகவானும் இடது புறம் உஷா தேவியும் வலது புறம் ப்ரத்யுஷா தேவியும் காட்சியளிக்கின்றனர். மேலும் மற்ற எட்டு கிரஹங்களும் இங்கு தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.  இமயமலையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த முனிவர்களுள் ஒருவர் காலவ முனிவர். அவருடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தபோது பின்னாளில் அவருக்கு தொழுநோய் பிடிக்கும் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். இமயமலைச் சாரலில் ஐம்புலன்களை அடக்கி, நவக்கிரகங்களை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தினால் ஈர்க்கப்பட்டு ஒன்பது தேவர்களும் காட்சியளித்தனர். காலவ முனிவர் தம்மை தொழுநோய் பற்ற இருப்பதாகத் தெரிவித்து, அந்நோய் பற்றாமலிருக்க வரம் கேட்டார். ஒன்பது கிரஹங்களும் வரமளித்து மறைந்தனர்.

படைப்புக் கடவுளான நான்முகன் ஒன்பது கிரஹங்களையும் அழைத்து "உயிர்களாய்ப் பிறந்த அனைவரும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும். அந்த முனிவருக்கு வர இருந்த நோய் உங்களுக்கு வரும்" என்று சாபம் கொடுத்தார். அவர்கள் சாபம் நீங்குவதற்காக நான்முகன் வாக்கின்படி வெள்ளெருக்கங்காட்டில் கடுந்தவம் இருந்தனர். பன்னிரு வாரங்களுக்குப் பின்னர் முப்பெருங்கடவுளரும் காட்சி தந்தனர். "உங்களைப் பிடித்திருந்த தொழுநோய் தொலைந்துவிட்டது. இன்று முதல் இவ்விடத்தில் துன்பம் தொலைய உங்களிடம் வருவோர்க்கு நீங்களே அருள் புரிய வரம் தருகிறோம்" என்று வரம் தந்தனர். சூரிய பகவான் தலைமையில் அனைவரும் மேற்கொண்ட தவத்தால் அங்கே அனைவருக்கும் கோவில் உண்டாகும் என்று அருள் புரிந்தார்.

கருவறையில் சூரிய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இடது புறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுஷாதேவி எனும் சாயாதேவியுடனும் நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார். சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார். சூரிய பகவான் உக்கிரம் அதிகம். அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது. ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில் உள்ளார். அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது. மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான அஸ்வம் (குதிரை)  இருக்கிறது.  நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவ கிரஹங்களுக்கும் தனித்தனி சன்னிதியாக அமைந்தது இத்தலத்தின் சிறப்பு . மற்ற நவக்ரஹ தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர். இங்கு திருமணக்கோலத்தில் உஷா, பிரத்யுஷா தேவியோடு சூரியபகவான் உள்ளது தனிச்சிறப்பு. ரதசப்தமி உற்சவம் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா, இந்த கோவிலின் மிகவும் முக்கிய திருவிழா ஆகும்.

பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூரிய பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெரும். மகா அபிஷேகம் என்று அழைக்கப்படும் இந்த அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

Temple details will be updating soon...

Temple details will be updating soon...

Temple details will be updating soon...

அருள்மிகு புதன் ஸ்தலம் - திருவெண்காடு

ஸ்வாமி : சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர்.
அம்பாள்: பிரமவித்யாநாயகி.
ஸ்தல வ்ருக்ஷம்: ஆல், கொன்றை, வில்வம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம்
வழிபட்டோர்: பிரம்மன், இந்திரன், புத பகவான், வெள்ளையானை

திருவெண்காடுஸ்தல வரலாறு: நவக்ரஹ ஸ்தலங்களில் திருவெண்காடு நான்காவது ஸ்தலம். காசிக்கு சமமான தலங்களில் ஒன்று . இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.  இங்கு நடராஜ சபையும்,  சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதியும் உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி,புதன் ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்ற ஸ்தலம். சுயம்பு மூர்தியான ஸ்வேதாரயேஸ்வரருக்கு திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் உண்டு. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான  அகோர மூர்த்தி மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றி  இங்கு அனுக்ரஹ மூர்தியாக அருள்பாளிக்கின்றார்.

வித்யாகாரகன் எனப்படும் புதபகவான் இங்கு எழுந்தருளும் ஸ்வேதாரயேஸ்வரரிடம் தன் அலி தோஷம் நீங்க தவம் இருந்து நவகிரகங்களில் ஒருவராகி அன்னை பிரஹ்ம வித்யாம்பிகையின் அனுக்ரஹத்தோடு அருள் பாலிக்கிறார். இவர் செய்த தவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார். நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.

திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது.

காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. அட்டவீரட்டத்தலம் போன்றே இங்கும் சிவபெருமான் மருத்துவாசுரனை சம்காரம் செய்து வீரச்செயல் புரிந்துள்ளார். ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது. சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது. பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!