யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் (ஆயிரம் இதழ் தாமரை போன்ற) உள்ள சந்திரமண்டலத்தில், சிவனை ஜோதி வடிவாக தியானம் செய்வார்கள். அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் தோன்றி அவர்கள் பரமானந்த நிலையில் திளைப்பார்கள். இதன் காரணமாக, உலகே வடிவான ஜோதிர்லிங்கம் குளிர்ந்து மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இது போன்ற யோகம் சாத்தியமல்ல. ஆகவே மக்கள் சுபிக்ஷமாக வாழ ஜோதி வடிவாக இந்த பன்னிரு ஜோதிர்லிங்கங்கள் தோன்றி மக்களுக்கு அருள் பாலிக்கின்றது.