சிவாச்சாரியார் வரலாறு
திருக்கயிலாயத்தில் பார்வதி பரமேசுவரன் திருக்கல்யாணம் நடந்த சமயம் பார்வதி பரமேசுவரனிடம், "சுவாமி! தங்களுக்கு மிக விருப்பமானதை செய்திட ஆசைபடுகிறேன்" என்றிட இறைவன் தனக்கு விருப்பமானதை பூசனை என கூறிட,
"எண்ணிலா ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை" என உரைத்தருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணில் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்து"
உமாதேவியார் மிக உவந்து பூசனை பொருட்களுடன் வந்து, "இறைவா! பூசனைபுரிய அனுமதிக்க வேணும்" எனக் கேட்டு நின்றாள். இறைவர், "தேவி! பூசனைக்கேற்ற இடம் பூலோகமே, பூலோகத்தில் பூசனை செய்து அதன் பயனைக் கைலாயத்தில் அனுபவிக்கலாம் என்றிட, தேவி "பூலோகத்தில் எங்கு பூஜிக்கலாம்? எப்படி பூஜிக்க வேண்டும்?" என்று கேட்க, இறைவன், "நகரேஷு காஞ்சி என்னும் (ப்ருத்வீ தலம்) காஞ்சிபுரம் அங்கு சென்று பூஜிக்க" என்று கூறி, பூசனை செய்ய நான்கு வேதங்கள், இருபத்தியெட்டு ஆகமங்கள், ஆறு அங்கங்கள் ஆகியவற்றையும் உபதேசமாகக் கூறினார்.
ஸ்காந்தே அகஸ்த்ய ஸம்ஹிதாயாம்
ப்ரணவாத்யா மஹா மந்த்ரா: அகாராத்ய க்ஷராணிச
சிவக்ஞாநாநி த்ரவ்யாணி காமிகாதீநி பூஸூரா:
ஸ்ரீமத் ஹாலாஸ்ய நாதஸ்ய ஸம்பவத் ஊர்த்வ வக்த்ரத:
புநஸ்த்வ தேவ தேவஸ் தத்புருஷாக்யயேந வக்த்ரத:
ஏகவிம்சதி பேதேநயுக்தம் ருக்வேத மப்ரவீத்
யஜுர்வேத த்வேகசத பேதயுக்தம் அகோரத:
ஸஹஸ்ர சாகா ஸம்யுக்தம் ஸாமவேதந்து வாமத:
அதர்வம் நவதாபிந்தம் ஸத்யோஜாதேந மப்ரவீத்
ஊர்த்துவ முகமான ஈசானத்திலிருந்து சிவஞானத்தை தரகூடிய சிவாகமங்கள் இருபத்தியெட்டினையும், தத்புருஷ முகத்திலிருந்து இருபத்தியொரு பேதங்களை உடைய ரிக் வேதத்தையும், அகோர முகத்திலிருந்து நூற்றியொரு பேதங்கள் உடைய யஜுர் வேதத்தையும், வாமதேவ முகத்திலிருந்து ஆயிரம் சாகைகளையுடைய ஸாம வேதத்தையும்,ஸத்யோஜாத முகத்திலிருந்து ஒன்பது பேதங்களுடைய அதர்வண வேதத்தையும் உபதேசமாகக் கூறினார். "ஆகமத்தின் மூலமாக பூஜை செய்ய வேண்டிய முறைகள் எத்தனை லிங்கங்களை வைத்து ஆத்மார்த்த பூஜை செய்ய வேண்டும்? என்னென்ன லிங்கங்களை வைத்து பூஜை செய்தால் என்னென்ன பலன்கள்?" என்று தேவி கேட்டாள்.
ஆத்மார்த்த பூஜையில் க்ஷணிகலிங்க பூஜையை கல் முதலிய பன்னிரெண்டினாலும் செய்யலாம், என்றிட அவற்றுள் நாலாவதாக கூறிய நதிமிருத்தை (மண்ணையே) சிவலிங்கமாகக் கொண்டு பூஜை செய்ய முற்பட்டாள். அதனை திருஞானசம்பந்த சுவாமிகள்
"வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக
போதத்தால் வழிப்பட்டாள் புள்ளிருக்கு வேளுரே" என்று பாடியுள்ளார்.
இவ்வாறு தினம் வழிபாடு செய்து வரும்போது ஒரு நாள் தேவியின் பக்தியை சோதிக்க எண்ணி, தனது தலையில் உள்ள கங்கையை பூஜை செய்யும் இடத்திற்கு மேற்கே சென்று அவிழ்த்துவிட ஓவென்ற இரைச்சலுடன் வெள்ளமாக வர, உடனே பூஜிக்கும் சிவலிங்கத்திற்கு எந்த இடையூறும் வராமல் பாதுகாப்பாக இருகைகளாலும் தழுவிக் கொண்டாள். இதனை சுந்தரமூர்த்தி சுவாமிகள்
எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்துள்ளி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்ற வா கண்டு
வெள்ளங்காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
கள்ளக்கம்பனை எங்கள் பிரானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே.
மேற்கேயிருந்து வந்த வெள்ளத்தை கண்டு தன் இருகைகளாலும் தழுவிட வெள்ளம் இருபக்கமும் சென்று கிழக்கில் ஒன்று சேர்ந்துள்ளது கம்பாநதி. தன்னை மறந்து, என்னை நினைந்து, சிறப்பான முறையில் வழிபட்டு வரும் தேவிமுன் காட்சி தந்து உன் பக்தியில் மகிழ்ச்சி அடைந்தோம்!. உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்க தங்களை என்றும் பிரியாமல் இருக்க வரம் தருமாறு கேட்டாள். அவ்வாறே தம்முடலில் இடது பாகத்தை தருகிறோம், என்று சுவாமி கூறிட, மேலும் இன்று வரை தங்களை பூஜித்து வந்தது தடைப்படாமல் தொடர்ந்து நடைபெற அருள் பாலிக்க வேணுமெனக்கேட்க, இறைவன் உடனே தன் ஐந்து முகங்களிலிருந்து ஐந்து ரிஷிகளை சிருஷ்டித்தார்.
கௌசிக காச்யபச்சைவ பாரத்வாஜோத கௌதம:
அகஸ்த்யச்சைவ பஞ்சே தே பஞ்சவக்த்ரேஷு தீக்ஷிதா:
கௌசிகர், காச்யபர், பாரத்வாஜர், கௌதமர், அகஸ்தியர் என்ற ஐந்து ரிஷிகளையும் தோற்றுவித்து தனது ஐந்து முகங்களின்று தீக்ஷை செய்து, அவர்களுக்கு ஐந்து மடங்களை தந்து சிவபரிபாலனம் செய்து வருமாறு அருளி செய்தார். பல சிஷ்யர்களை உருவாக்கி அவர்களுக்கு சிவ தீக்ஷை செய்து, கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம், ப்ரதிஷ்டாதி உத்ஸவாந்தம், உத்ஸவாதி ப்ராயச்சித்தாந்தம் செய்யும் முறைகளை அறிவித்து, சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிர்வாணதீக்ஷை, ஆச்சார்யாபிஷேகம், முதலியவைகளைச் செய்வித்து ஆத்மார்த்த சிவபூஜை, பரார்த்த பூஜைகள் முதலியவைகளை பரவச் செய்து, சிவ பரிபாலனம் செய்து வருமாறு ஆக்ஞாபித்தார்.
கைலாஸ சிகரேரம்யே சிவஸ்யாப்யர்ச்சநார்த்தகம்
மத்யே மந்தானகாளீசம் பூர்வேச ஆமர்த்தகீ ததா
யாம்யே புஷ்பகிரீஞ் சைவ கோளகம் சௌம்ய தேசகே
ரணபத்ரம் பச்சிமே சாபி அதிபாஞ்ச ததச்ருணு
தூர்வாஸ ருருச்சைவ ததீசி ச்வேதமேவச
உபமன்யுரிதிக்யாத: மடாநாம் அதிபாம் ச்ருணு
கௌசிகோ ஊர்த்து வக்த்ரேண தீக்ஷிதோ சிவகோசர:
காச்யபோ புருஷேனைவ சிகாகோசர ஸம்ஸகம்
பாரத்வாஜோப்ய கோரேண தீக்ஷிதோ ஜோதிகோசர:
வாமே கௌதம ஸம்க்ஞானம் ஸாவித்ரி கோசரஸ்மிருதம்
ஸத்ய வக்தரோத்ய கஸ்தயச்ச தீக்ஷிதோ வ்யோமகோசர
பஞ்சகோசர ஸம்ஞானம் ஆதிசைவா இதிஸ்ம்ருதா
கோசரம் சிவ சின்னம்ஹி கோத்ரஸ்ய முனிவர்ககம்
ஸூத்ர மாசாரமேவம்ஹி சைவாநாம் உத்யதே க்ரமாது
ருத்ராக்ஷமுபவீதஞ்ச ததாசைவ சோத்தரீயகம்
பஸ்மஞ்ச தண்ட கௌபீனம் பஞ்சமுத்ரா ப்ரகீர்த்திதா
சிகாநாமேவ ஸாமாந்யம் உஷ்ணீஷம் குருணாமபி
ஆதௌ சிவஸ்வமஸ்தீதி ஆதிசைவ உதீரத:
சிவ தீக்ஷிதச் சைவ ஏதே சிவப்ராஹ்மண இதி ஸ்ம்ருதா:
1. கௌசிகர்
ஈசான முகத்தால் தீக்ஷை செய்விக்கப்பெற்று மந்தானகாளீச மடத்தையும் அதன் அதிபராக தூர்வாச மஹரிஷியையும் பெற்று
சிவகோசரத்தின் மூலமாக
கௌசிகோ நந்தகோ தக்ஷோ விச்வாமித்ர ஸுநந்தன:
வால்மீகிச முனிஸ்ஸத்யம் புலஸ்த்யோ விபுலஸ்ததா
அதிதீர்க்கச்ச வக்த்ராங்கோ போதாயநஸ் ஸநாதன:
ஸநத்குமாரோ மேதாவி வால்மீகோ மத்யமஸ்தக
ஆச்வாலாயநச்சாங்கிச்ச சிவகோசரவர்க்கிண:
1. கௌசிகர் 2. நந்தகர் 3. தக்ஷர் 4. விச்வாமித்ரர் 5. ஸுநந்தஸ் 6.வால்மீகி 7. ஸத்யர் 8. புலஸ்தியர் 9. விபுலர் 10. அதிதீர்க்கர்
11. வக்த்ராங்கர் 12. போதாயனர் 13. ஸநாதர் 14. ஸனத்குமாரர் 15. மேதாவி 16. ஆச்வலாயநர்
இவர்கள் கௌசிகரிடம் சிவ தீக்ஷை பெற்ற சிவகோசரத்தை சார்ந்தவர்கள்.
2. காச்யபர்
தத்புருஷ முகத்தால் தீக்ஷை செய்விக்கப்பெற்று ஆமர்த்தகீ மடத்தையும் அதன் அதிபராக ருருமஹரிஷியையும் பெற்று சிவகோசரத்தின் மூலமாக
காச்யபோ ஆங்கிரச ஸ்தூல கர்த்தபச்சய வநோதக:
நாட்யாயனச்ச சாண்டில்ய சங்குகர்ண புராந்தந:
சங்கஸ்தூல சிகினச்சைவ முக்யோவை ரோம ஹர்ஷண:
ஆபஸ்தம்பா இமேஸர்வா : சிகாகோசரவர்கிண:
1. காச்யபர் 2. ஆங்கிரசர் 3. ஸ்தூலரிஷி 4. கர்த்தபரிஷி 5. வநோதகர் 6. நாட்டியாயனர் 7. சாண்டில்யர் 8. சங்குகர்ணர்
9. புராந்தனர் 10. சங்கர் 11. ஸ்தூலர் 12. சிகினர் 13. முக்யர் 14. ரோமரிஷி 15. ஹர்ஷணர் 16. ஆபஸ்தம்பர்
இவர்கள் காச்யபரிடம் சிவதீக்ஷை பெற்று சிகா கோசரத்தை சார்ந்தவர்கள்.
3.பாரத்வாஜர்
அகோர முகத்தால் சிவ தீக்ஷை செய்விக்கப்பெற்று புஷ்பகிரி மடத்தையும் அதன் அதிபராக ததீசி முனிவரையும் பெற்று ஜோதி கோசரத்தின் மூலமாக
பாரத்வாஜ த்ரிசங்குச்ச மார்க்கண்டேயோ சநோரஜ:
ஸுமஹோ தேவலோ ஜங்க: பிங்களோ வருணஸ்ததா
விச்வஸ்ருட் வியாக்ரபாதச்ச ரோமச்சாந்த்ர வாஜஸ:
க்ருணச்சைவ இமேஸர்வே ஜோதி கோசர வர்கிண:
1. பாரத்வாஜர் 2.திருசங்கு 3. மார்க்கண்டேயர் 4. சநோரஜர் 5. ஸுமஹர் 6. தேவலர் 7. ஜங்கர் 8. பிங்களர் 9. வருணர் 10. விசவஸ்ருட் 11. வ்யாக்ரபாதர் 12. ரோமசர் 13. சாந்த்ரவர் 14. கிருஷ்ணர்
இவர்கள் பாரத்வாஜரிடம் சிவ தீக்ஷை பெற்று ஜோதி கோசரத்தை சார்ந்தவர்கள்.
4.கௌதமர்
வாமதேவ முகத்தால் சிவ தீக்ஷை செய்விக்கப்பெற்று கோளகீ மடத்தையும் அதன் அதிபராக ச்வேத மஹரிஷியையும் பெற்று ஸாவித்ரி கோசர மூலமாக
கௌதமோ கலபச் சைவ முத்கலோ வியவஸ் ததா
கவ்யச்ச விஜயச்சைவ பிந்துச்சோபந்த வஸ்ததா
ரிக்யச்சாங்கோ வஸிஷ்டச்ச காத்யாயநோ ப்ரஹஸ்பதி:
ஸாவித்ரி கோசரச்சைவ புனந்தே வ்யோம கோசரா:
1. கௌதமர் 2. கலபர் 3.முத்கலர் 4. வயவர் 5. கவ்யர் 6. விஜயர் 7. பிந்துசோபர் 8. ரிக்யர் 9. சாங்கியர் 10.வஸிஷ்டர்
11. காத்யாயனர் 12. ப்ரஹஸ்பதி
இவர்கள் கௌதமரிடம் சிவ தீக்ஷை பெற்ற சாவித்ரி கோசரத்தை சார்ந்தவர்கள்
5.அகஸ்தியர்
ஸத்யோஜாத முகத்தால் சிவ தீக்ஷை செய்விக்கப்பெற்று ரணபத்ர மடத்தையும் அதன் அதிபராக உபமன்யு மஹரிஷியையும் பெற்று வ்யோம கோசரத்தின் மூலமாக
பூதரோ கௌதமச்சைவ ச்வேத கௌத்ஸோ விபாவஸு:
பரசரச்ச பலிச : சம்பரோ நீலலோஹிதர்
பலவச்ச இமே ஸர்வே வ்யோம கோசர வர்கிண:
1. அகஸ்தியர் 2. பூதரர் 3.கௌதமர் 4. சுவேதர் 5. கௌத்ஸுகர் 6. விபாவஸு 7. பராசரர் 8. பலி 9. சம்பர: 10. நீலலோஹித
11. பலவர்
இவர்கள் அகஸ்தியரிடம் சிவ தீக்ஷை பெற்ற வ்யோம கோசரத்தை சார்ந்தவர்கள்.