ஆதிசைவர்களின் தமிழ்த் தொண்டு
"சைவமும் தமிழும் தழைத்தினி தோங்குக’ என்ற வாக்கிற்கேற்ப ஆதிசைவர்கள் சைவ சமயத்திற்கும் தமிழ் பக்தி இலக்கியங்களுக்கும் செய்த தொண்டு அளப்பரியதாகும்.
சங்க்காலம் தருமி என்ற ஆதிசைவர் பொற்கிழி பெறுவதற்காக, சங்கப்பலகை ஏறி நக்கீர்ரோடு வாதிட்டு சங்கப்புலவர்களுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்தார் சிவபெருமான்.
சைவ சமயத்தில் மையமான அறுபத்தி மூன்று நாயன்மார்களையும் அவர்கள் செய்த சிவத் தொண்டையும் இந்த உலகம் முழுவதும் அறியச் செய்தவர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சிவாமிகள். தாம் பாடியத் ‘திருத்தொண்டைத்தொகை தேவாரம்’ மூலம் அடியவர்களில் நாயன்மார்களில் பெருமைகளை உலகறியச் செய்த்தன் காரணமாக பக்தி இயக்கமும் சைவ சமயமும் புத்துயிர் பெற்றது. சுந்தரர் பாடியத் திருத்தொண்டத் தொகை தேவாரத்தின் காரணமாகவே, தமிழில் ‘பெரிய புராணம்’ எனும் அழகிய தமிழ் இலக்கியம் சேக்கிழாரால் பாடப் பெற்றது.
அதேபோல், திருநாரையூரில் அவதரித்த நம்பியாண்டார் நம்பி எனும் ஆதிசைவ குலத்தில் உதித்த சிறுவர்தான் பொல்லாப் பிள்ளையார் திருவருளால் தேவார திருமுறைகளைக் கண்டுபிடித்து மீட்டெடுத்து தந்து, தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் அளப்பரிய மிகப்பெரும் தொண்டினை செய்தார்.
கரையான் புற்றுகளால் செல்லரித்து அழியக்கூடிய நிலையில் இருந்த் தேவாரங்களை எல்லாம் கண்டுப்பிடித்துத் தந்த பெருமை நம்பியாண்டார் நம்பிகளையே சாரும். நம்பியாண்டார் நம்பி தேவார திருமுறைகளைக் கண்டு பிடித்த்தோடு அல்லாமல், அவைகளை முறைப்படி திருமுறைகளாகத் தொகுத்து சைவ சமயத்திற்கும் தமிழுக்கும் மிகப் பெரும் தொண்டு செய்தவர். நம்பியாண்டார் நம்பி இல்லையேல் இன்று தேவாரமும் இல்லை. திருமுறைகளும் இல்லை. சைவ உலகம் என்றென்றைக்கும் ஆதிசைவராகிய நம்பியாண்டார் நம்பிகளுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.
ஆகமங்களின் ஞானபாதமான சைவ சித்தாந்த தத்துவத்தை ‘சிவஞானசித்தியார்’ எனும் நூலாகப் பாடி தமிழுக்கும், சைவ சமயத்திற்கும் தனிப்பெரும் தொண்டு செய்தவர் ’சகலாகம பண்டிதர்’ என்று அழைக்கப்படும் அருள்ந்ந்தி சிவாசாரியார்.
சிவஞான சித்தியார் பெருமைக்கும் சிறப்புக்கும் அது பெற்ற ‘ஆர்’ என்ற அடைமொழியே போதுமானதாகும். சிவஞான சித்தியார் இல்லையேல் இன்று சைவ சித்தாந்த தத்துவத்தைத் புரிந்து கொள்வது கடினம். ஏனெனில் மெய்கண்டாரின் சிவஞானபோதம் சூத்திர வடிவில் சுருக்கமாக உள்ளதால், சைவசித்தாந்த தத்துவத்தை எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும்வகையில் பாடியுள்ளார். மேலும், அருள்ந்ந்தி சிவாசாரியார் ஆகமத்திற்காகவே தோன்றிய ஆதிசைவ மரபில் அவதரித்தவர் என்பதாலும், சகலாகம பண்டிதர் என்பதாலும், ஆகம தத்துவங்களை மிகச்சிறந்த முறையில் சிவஞான சித்தியாரில் கூறுயிருப்பார். எனவேதான், தருமை ஆதின குருமுதல்வர் குருஞானசம்பந்தர்.
பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே
ஓர் விருத்தப் பாதி போதும்’ என்று பாடியுள்ளார்.
தாயுமானவ சுவாமிகள்,
‘பாதிவிருத்தத்தால் இப்பார் முழுவதும் ஆக உண்மை
சாதித்தார் பொன்னடியைச் சாரும்நாள் எந்நாளோ?’
என்று சிவஞான சித்தியார் நூலை புகழ்ந்துரைப்பார்.
மேலும், பழமையான தமிழ் செய்யுள் பகுதி ஒன்று, தரமுயர்ந்த ஆறு தமிழ் நூல்களை வரிசைப்படுத்தி குறிப்பிட்டு, இவை தரமான தமிழ் நூல்கள் என்று புகழ்ந்து போற்றுகிறது. அப்பாடல் இதோ:
‘வள்ளுவர்சீர் அன்பர்மொழி வாசகம் தொல்காப்பியம்
தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை – ஒன்றிய சீர்த்
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராரும்
தண்டமிழின் மேலாம் தரம்
இப்பாடலில் திருவள்ளுவரிய திருக்குறள், மாணிக்கவாசகரின் திருவாசகம், தொல்காப்பியம், பரிமேலழகர் செய்த உரை, சேக்கிழார் பாடிய பெரிய புராணம் இவற்றொடு அருள்நந்தி சிவாசாரியார் பாடிய சிவஞான சித்தியாரையும் குறிப்பிட்டு புகழப்படுவதைக் காணமுடியும்.
சிவஞான சித்தியார் சாத்திரநூல் மட்டுமன்று. முழு அளவு இலக்கிய நூலாகவும் கொள்ளத்தக்கது. ஓரளவு தோத்திர நூலும் ஆகும். தொட்ட இடமெல்லாம் சாத்திரச் சிறப்போடு இலக்கியச் சிறப்பும் கமழும் என்பார்கள் தவத்திரு ஊரன் அடிகள் அவர்கள். சைவ சித்தாந்தக் கொள்கைகளில் தொண்ணூற்று ஐந்து விழுக்காடு சிவஞான சித்தியாரிலேயே உள்ளன. எனவேதான்,
‘சிவனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை
சித்தியார்க்குமிஞ்சிய சாத்திரமும் இல்லை’
என்ற பழமொழி ஏற்பட்டது.
இது ஒன்றே அருள்நந்தி சிவாசாரியாரின் பெருமையையும் அவர் செய்த தமிழ்த் தொண்டையும் பறை சாற்றும். இவ்வாறு போற்றப்படும் சிவஞான சித்தியார் எனும் அரிய நூல், ‘பரபக்கம், சுபக்கம் என்ற இரு பகுதிகளைக் கொண்டது. அடுத்து அருள்நந்தியார் ‘இருபா இருஃபது’ என்ற சைவ சித்தாந்த நூலும் இயற்றியுள்ளார்.
சைவ சித்தாந்த தத்துவத்திற்கும், தமிழுக்கும் ஆதிசைவர் அருள்நந்தி சிவாசாரியாரின் செய்திருக்கும் தொண்டும், ஞானப் பேருதவியும் பெரிதும் போற்றுதற்குரியதாகும். அதேபோல், சான்றோருடைத்த தொண்டை நாட்டில் காஞ்சி குமரக்கோட்டத்தின் அர்ச்சகர்காளத்தியப்ப சிவாசாரியார் திருமகனாக அவதரித்தவர் கச்சியப்ப சிவாசாரியார். ஆதிசைவ மரபில் வந்த கச்சியப்ப சிவாசாரியாரால் பாடப் பெற்றது கந்தப்புராணமாகும்.
கந்தர் புராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை’ –என்று பழமொழி எழும் அளவிற்கு பொருட்செறிவு கொண்ட்தாகவும், இலக்கிய வளம் செறிந்த நூலாகவும் பாடியுள்ளார் கச்சியப்ப சிவாசாரியார். ’கச்சியப்பன் செய்த கந்த புராணக் கலைக்கடல்’ –என்ற வாக்கே கச்சியப்ப சிவாசாரியாரின் பெருமையை உணர்த்தும்.
இனிய வடமொழி அமுதம் உண்டு தென்மொழி வாரம்
என்ற கடலைக் குடித்து ஓர்
இணையிலா உன்சரிதை கூறும் விலிகொண்டு, அன்பில்
ஏறும் ஒரு கச்சியப்பர்’
என்று ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கச்சியப்ப சிவாசாரியாரை போற்றிப் புகழ்கின்றார்.
கந்தபுராணம் மொத்தம் ஆறுகாண்டங்களைக் கொண்டு 10,345 செய்யுள்களைக் கொண்டது. கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணத்தை அரங்கேற்றி முடித்தபின், தொண்டை மண்டல வேளாளப் பிரபுக்கள் அவரை வணங்கி, தந்தப் பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று பெருமைப்படுத்தினர் என்பதை,
’அந்தப்புரமும் அறுநான்கு
கோட்ட்த் தாரும் ஒன்றாய்க்
கந்த புராணம் பதினா
யிரம் சொன்ன கச்சியப்பர்
தந்தப் பல்லக்கிச் சிவிகையும்
தாங்கிஅச் சந்நிதிக்கே
வந்தப் புராணம் அரங்கேற்றி
னார்தொண்டை மண்டலமே’
என்ற தொண்டை மண்டலச் சதகம் பாடல் மூலம் அறிய முடிகிறது.
மேலும், அனைத்து சைவசமய விழாக்களிலும், திருக்கோயில்களிலும் சைவசமய பக்தர்களால் அன்போடு வாழ்த்துப் பாடலாக பாடப் பெற்றுவரும்,
’வான்முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்ன்ன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்’
என்ற இப்பாடல் அருமையிலும் அருமையான வாழ்த்துப் பாடலாகும்.
தமிழின் இனிமையும், சைவ சமயத்தின் சிறப்பையும் எடுத்துக்கூறும் விதமாக, சைவ சமயத்திற்குக் கிடைத்த மணிமகுடமாக இந்த வாழ்த்துப்பாடல் விளங்குகின்றது. சைவ சமய அன்பர்கள் அனைவரையும் வசீகரித்து அன்போடு பாட வைக்கும் காரணம் ஒன்றே இதன் பெருமைக்கும், புகழுக்கும் சான்றாகும். இப்பாடல் ஒன்றே ஆதிசைவராகிய அருள்நந்தி சிவாசாரியாரின் வாக்கு
வன்மைக்கும் தமிழ்த் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக் காட்டாகும். பெரிய புராணத்திற்கு முதல் நூலாக திருத்தொண்டத் தொகையும், வகை நூலான திருத்தொண்டர் திருவந்தாதியை தந்தும், சைவ சமயத்திற்கும், தமிழ்மொழிக்கும் தோத்திரம் பாட ஸ்ரீ சுந்தரரையும், ஸ்ரீ நம்பியாண்டார் நம்பியையும், சாத்திரம் பாட ஸ்ரீ அருள்நந்தி சிவாசாரியாரையும், புராணம் பாட ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியாரையும் தந்துள்ள சிற்ப்பு புகழ்மிக்க மரபே ஆதிசைவ மரபாகும். ஆதிசைவர் மழவை மகாலிங்கையர் தமிழ்த் தொண்டு
19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த மிகப்பெரும் தமிழ் பண்டிதர் மழவை மகாலிங்கயர் ஆவார். அக்காலங்களில் மிகப்பெறும் தமிழ் வித்வானாக சென்னை பட்டினத்தில் சிறப்புற்று வாழ்ந்தவர். யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் அவர்கள், பார்சிவன் பாதிரியார் வேண்டுதலுக்கிணங்க பைபிளை தமிழில் மொழி பெயர்த்தார். அந்த மொழி பெயர்ப்பு சரியானதுதானா என்று பரிசோதித்துத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அன்றைய சென்னை கிருஸ்துவ சபை, மழவை மகாலிங்கையரிடம் ஒப்படைத்தது. மழவை மகாலிங்கையர் ஆறமுக நாஅவலரின் பைபிள் தமிழ்மொழி பெயர்ப்பை பரிசோதித்து, முற்றும் வாசித்தும், அதிலே பிழையில்லை யென்றும், வசன நடை நன்றாக இருக்கின்றது என்றும், இந்தப் பிரகாரம் அச்சிட்டு வெளியிட்த் தகுதியானது என்றும் இவர் சான்றளித்த பின்பே மேற்படி சபையால் நாவலரின் மொழி பெயர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆங்கிலேயர்களால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்லூரி, சென்னை பிரசிடென்சி காலேஜ் (மாநிலக் கல்லூரி) ஆகும். இக்கல்லூரியில் முதல் தமிழ் பேராசிரியராக விளங்கியவர் மழவை மகாலிங்கையர் ஆவார். இவரை தமிழ்த் தாத்தா உ.வெ.சா. அவர்கள் தமது நினைவி மஞ்சரி நூலில், ‘பிரசிடென்சி காலேஜில் ஆரம்பித்தில் தமிழாசிரியராக இருந்தவர் மகாலிங்கையரென்பவர். அவர் ஆதிசைவர். மழவராயனேந்தலென்னும் ஊரினர். அக்காலத்தில் இந்நகரில் (சென்னை) தமிழ் விஷயமாக எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் அவருடைய சம்பந்தம் இருக்கும்’ – என்று புகழ்ந்து கூறுகிறார்.
மேலும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தமது இள்மைப் பருவத்தில் (கி.பி. 1840-1842) சென்னை சென்றிருந்த பொழுது, சபாபதி முதலியார், திரு வேங்கடாசல முதலியார், திருவம்பலத் தின்னமுதம் பிள்ளையென்னும் மூவர் மூலமாக மழவை மகாலிங்கையர் சந்தித்ததையும், தமிழில் தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டுத் தெளித்துக்கொண்ட்தாகவும், தமிழ்த் தாத்தா உ.வெ.சா அவர்கள் தமது குருநாதரின் வரலாற்று நூலாகிய ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதி வருமாறு, “மழவை மகாலிங்கையரை அறியாதவர் யாவர்?” மதுரைக்குக் கிழக்கேயுள்ள மழவராயனேந்தலென்பது அவர் ஊர். அப்பெயரின் மரூ உவே மழவையென்பது. மகாலிங்கையர் திருத்தணிகை விசாகப் பெருமானையரிடத்தும், அவர் சகோதரர் சரவணப் பெருமாளையரிட்த்தும் தமிழ் நூல்களை முறையே பாடங்கேட்டவர். கேட்டவற்றை ஆராய்ந்து தெளிந்தவர்.
கம்பராமயணம், திருத்தணிகைப் புராணம் முதலிய பெருங்காப்பியங்களில் நல்ல பயிற்சி உள்ளவர். இலக்கண அறிவை விசேஷமாக பெற்றவர். அஞ்சாநெஞ்சினர். விரைந்து செய்யுள் செய்யும் ஆற்றலுடையவர், ஸங்கீத லோலர், சிநேக வாத்ஸல்ய சீலர், ஆதிசைவ குலதிலகர், தாண்டவராயத் தம்பிரானுக்கு உயிர்த் தோழர், பிற்காலத்தில் ஆறுமுகநாவலர் சென்னைக்கு வந்திருந்தபொழுது பலருடைய வேண்டுகோளுக்கு இணங்கி அவரெழுதிய பைபிள் தமிழ் வசன புத்தகத்தைப் பரிசோதித்தற்க்குத் தேர்ந்தண்டுக்கப் பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்நூலில்,
பிள்ளையவர்கள் அக்காலங் தொடங்கி மகாலிங்கையரோடு பழகுதலை மிகுதியாக வைத்துக்கொண்டு அவரிடல் நன்னூல் விருத்தியுரை, காரிகையுரை, தண்டியலங்காரவுரை, நாற்கவிராச நம்பியகப்பொருளுரை முதலியவற்றிலும், பிறவற்றிலும், தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டுத் தெளிந்து அதுவரை தமக்கு அகப்படாமல் இருந்த்தாகிய இலக்கணக் கொத்துரையையும் அவர்பால் பாடங்கேட்டனர்’ – என்று குறிப்பிடுக்கின்றார்.
இத்தகைய மிகப்பெறும் புகழைப் பெற்று தமிழ் வித்வானாக விளங்கிய மழவை மகாலிங்கையர் ஓர் ஆதிசைவர் என்றும் ஆதிசைவ குலத்தில் தோன்றியவர் என்றும் தமிழ்த் தாத்தா உ.வெ.சா குறிப்பிட்டுள்ளது ஆதிசைவர்களுக்கு மிகப் பெரும் பெருமையாகும்.
மழவை மகாலிங்கையர் சிறுவர்களுக்கு உபயோகமாகும்படி, வசன நடையில் ஓர் இலக்கண நூல் எழுதியுள்ளார். கி.பி. 1847 –ல் முத்ல்முதலாக ‘தொல்காப்பியம் எழுத்ததிகாரம்’, ‘நச்சினார்க்கினியர் உரையை’ பதிப்பித்துள்ளார். ‘மழவை சிங்கார சதகம்’ முதலிய பல தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். இவ்வாறு பல தமிழ்தொண்டுகளை செய்துள்ளார்.
இவ்வாறு, ஆதிசைவர் மழவை மகாலிங்கையர் தமிழ்த்தொண்டினை போல, சைவமும் தமிழும் தழைக்க, முப்போது திருமேனி தீண்டும் ஆதிசைவ மரபில் தோன்றி, தமிழ்த் தொண்டும் சிவத்தொண்டும் செய்த ஆதிசைவர்களின் பெருமையை என்றென்றும் மறவாது போற்றுவோம்.